| உலக நாயகன் கமலஹாசன் இயக்கி நடிக்க இருக்கும் ‘விஸ்வரூபம்’ படத்தில் முதலில் சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாக இருந்தது. |
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தயாராக இருப்பதால் இப்படத்தில் நடிக்க வைபதற்கு ஒரு பாலிவுட் நடிகையை வலை வீசித் தேடிக் கொண்டிருந்தார். தற்போது அந்த தேடலுக்கு பலன் கிடைத்திருக்கிறது. ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நடித்த சமீரா ரெட்டிதான் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் உறுதிபடக் கூறுகின்றன. இதனை சமீராவின் நெருங்கிய தரப்பும் ஒத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது. |
Cinema News
Friday, August 19, 2011
கமலின் விஸ்வரூபம் படத்திற்கு கதாநாயகி கிடைச்சாச்சு
கமலின் விஸ்வரூபம் படத்திற்கு கதாநாயகி கிடைச்சாச்சு
| உலக நாயகன் கமலஹாசன் இயக்கி நடிக்க இருக்கும் ‘விஸ்வரூபம்’ படத்தில் முதலில் சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாக இருந்தது. |
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தயாராக இருப்பதால் இப்படத்தில் நடிக்க வைபதற்கு ஒரு பாலிவுட் நடிகையை வலை வீசித் தேடிக் கொண்டிருந்தார். தற்போது அந்த தேடலுக்கு பலன் கிடைத்திருக்கிறது. ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நடித்த சமீரா ரெட்டிதான் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் உறுதிபடக் கூறுகின்றன. இதனை சமீராவின் நெருங்கிய தரப்பும் ஒத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது. |
Sunday, September 13, 2009
விஜயின் அரசியல் பிரவேசம்... சித்தர் குறித்த தேதி
திருவண்ணாமலை சித்தர் சொல்லிதான் அரசியலில் குதிக்க போகிறாராம் விஜய். அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், திருவண்ணாமலை, திருக்கடையூர் என்று இந்து கடவுள்கள் மீதும் அலாதி பக்தி வைத்திருக்கிறார் விஜயின் அம்மா ஷோபா. அதனால் மேற்படி திருத்தலங்களுக்கு அவ்வப்போது விசிட் அடிக்கும் அவர் போகிற இடத்திலெல்லாம் பிள்ளையின் அரசியல் பிரவேசத்திற்காகவும் வேண்டிக் கொள்வாராம். அப்படி திருவண்ணாமலைக்கு போகிற போதுதான் எப்போது அரசியலுக்குள் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற உத்தரவும் வந்ததாம் சித்தரிடமிருந்து. சித்தன் போக்கு, சிவன் போக்கு என்றிருக்கும் சித்தர்கள் கூட, இப்போதெல்லாம் அரசியல் ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்களே என்ற சந்தேகம் இருக்கட்டும். திருமதி ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் ஒரு அற்புதமான காரியம் செய்திருக்கிறார்.
அபிராமி பட்டர் பாடிய பாடல்களை தனது குரலில் பாடி ஆடியோ தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். கடந்த வாரம் இதற்காக திருக்கடையூர் அபிராமி சன்னதிக்கு சென்றிருந்தாராம். அந்த சன்னதியில் வைத்தே இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை சிம்ப்பிளாக நடத்தியிருக்கிறது கோவில் நிர்வாகம்.
விஜயின் அம்மா கோவிலுக்கு வருகிற தகவலை ரகசியமாகவே வைத்திருக்க நினைத்தாலும், நடக்கிற காரியமா அது? விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் கோவில் வாசலில் முற்றுகையிட்டார்களாம். ரசிகர்களின் அன்புக்கு நின்று நிதானமாக நன்றி சொல்ல கூட முடியாதளவுக்கு தள்ளுமுள்ளு.
கோவிலில் என்ன வேண்டிக் கொண்டிருப்பார்? சித்தர் குறித்த தேதி சீக்கிரம் வரட்டும் என்றா?
Friday, September 11, 2009
'சுல்தான்' எப்ப வருவார்?
ரஜினி ரசிகர்களின் இப்போதையே ஒரே கேள்வி சுல்தான் ரிவீஸ் எப்போது என்பதுதான். காரணம் எந்திரன் படம் 85 சதவிகிதம் முடிந்துவிட்டதாக ரஜினி கூறியுள்ளார். அதே போல சுல்தான் படமும் 85 சதவிகிதம் முடிந்துள்ளதாக சௌ ந்தர்யா கூறியுள்ளார். |
| எனில் எந்தப் படம் முதலில் வெளியாகும்? சுல்தான் எந்த மாதிரி படமாக இருக்கும்? "இது அக்மார்க் ரஜினி படம்... நானும் அதிரடியான ரஜினி படங்களுக்கு ரசிகைதான். அந்தப் படங்களை விட அனைத்து வகையிலும் மேம்பட்ட படமாக சுல்தான் இருக்கும். நகரத்து ரசிகர்களாக இருந்தாலும், கிராமத்து ரசிகர்களாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் சுல்தான் பார்க்க திரையரங்குக்கு வரவேண்டும் என நினைக்கத் தூண்டும் அளவுக்குக் காட்சிகளில் பிரமாண்டமும் பொழுதுபோக்கு அம்சங்களும் அத்தனை சிறப்பாக வந்துள்ளன. எடுத்த வரையில் அப்பாவுக்கு பரம திருப்தி. இன்னும் சில வாரங்களில் முழுவதுமாக படப்பிடிப்பு முடிந்துவிடும். இந்தப் படத்தின் பல சிறப்புகளை சர்ப்பரைஸ் பேக்கேஜாக வைத்துள்ளேன். அவை முதல் காட்சி பார்க்கும்போது மட்டும்தான் உங்களுக்கு தெரியவரும். அதுதான் அடுத்த காட்சிக்கும் உங்களை இழுத்து வரும்..., என்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த் அசைக்க முடியாத நம்பிக்கையுடன். 'படத்தின் பட்ஜெட் ரூ.700 மில்லியன்... இதில் இன்னும் சில மில்லியன்கள் கூடினாலும் ஆச்சரியமில்லை...', என்கிறார் ஆக்கர் ஸ்டுடியோவின் தலைமை அலுவலர் (மார்கெட்டிங்) கார்த்திக் . எதிர்பார்க்கும் வசூல் ரூ.2.5 பில்லியன்களாம். இதிலும் கொஞ்சம் கூடினால் வியப்பில்லைதானே! ரிலீஸ் தேதி எந்திரனுக்கு முன்பா பின்பா? அதை இன்னும் முடிவு செய்வில்லை. ஜனவரி 2010க்குப் பிறகு அறிவிக்கப்படும் என்கிறார்கள். |
Tuesday, September 1, 2009
நடிகர் சிம்பு வீட்டில் ரசிகர்கள் மோதல்
| அரசியல் கட்சிகள் ரேஞ்சுக்கு சிம்புவின் ரசிகர் மன்றம் மாறிவிட்டிருக்கிறது. |
சிம்பு ரசிகர் மன்றத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தவரை சிம்பு தூக்கிவிட அவர் தன் சகாக்கள் சிலரைக் கூட்டி வந்து நடிகர் சிம்புவின் வீட்டின் முன்பு நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து சிம்பு வந்து சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே நின்ற ரசிகர்களுக்கும் வீட்டின் உள்ளே நின்று கொண்டிருந்த ரசிகர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்பு காவல்துறையினர் வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டியுள்ளார்கள். இதனால் சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ரகளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்ய முயற்சித்தனர். ஆனால், ‘இது எங்கள் ரசிகர் மன்ற பிரச்சனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நடவடிக்கை வேண்டாம்’ என்று சிம்பு கேட்டுக் கொண்டதால் கைது செய்யாமல் விட்டுவிட்டனர். |
முன்பு கணவன் இப்போது நண்பன் - சோனியா அகர்வால்

| செல்வராகவனுக்கும் சோனியாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளனர். |
இந்த கருத்து வேறுபாட்டுக்கு நடிகை ஆன்ட்ரியாவுடன் செல்வராகவனுக்கு இருந்த தொடர்பு என்று தனிப்பட்ட முறையில் சோனியா மனதில் சில புழுக்கங்களும் இருந்து வந்துள்ளன. இது பின்பு கருத்து வேறுபாடு தோன்றவும் காரணமாக அமைந்திருக்கிறது. “கணவராகப் பார்த்த செல்வராகவனை இப்போது எனது நண்பராகப் பார்க்கிறேன். எப்போதாவது போனில் பேசிக் கொள்கிறோம். ஆன்ட்ரியாவால் நாங்கள் பிரிகிறோம் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன். செல்வராகவன் படங்களில் நடிப்பேனா என்று இப்போது சொல்ல முடியாது...” என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் சோனியா அகர்வால். இதையடுத்து சோனியா விரைவில் படங்களில் தலைகாட்டுவார் என்று தெரிகிறது. ம்... அக்கா அண்ணி வேடம்தான் கிடைக்கும்... |
விஜய் படம் புறக்கணிப்பு - தமிழ் சங்கம் அதிரடி

| விஜய் படங்களை புறக்கணிப்பது என கனடா தமிழ் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் விஜய்க்கு புதுச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. |
| தமிழ் சினிமா வர்த்தகத்தில் வெளிநாட்டுவாழ் ஈழத் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களை நம்பிதான் படங்களின் வெளிநாட்டு உரிமை பெரும் தொகைக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், விஜய் நடிக்கும் படங்களை புறக்கணிப்பது என கனடா தமிழ் சங்கம் அறிவித்துள்ளது, விஜய் படங்களின் வர்த்தகத்தை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் காங்கிரஸ் கட்சின் மீது அளவுகடந்த வெறுப்புடன் உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் காங்கிரஸ் ராகுல்காந்தியை சந்தித்து அரசியல் பற்றி விவாதித்தது ஈழத் தமிழர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கனடா தமிழ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் அரசியலில் ஈடுபடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அவருடைய படங்களை புறக்கணிப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஒரு தமிழனாக இந்த அறிக்கைக்கு விஜய் மரியாதை செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. |

