Sunday, August 30, 2009

பிடித்த நடிகையும் பிள்ளையார் சதுர்த்தியும்!





சினேகாவுக்கு பிடித்த ஃபிரண்டு பிள்ளையார்தான். உலகின் எந்த மூலைக்கு போனாலும் ஒரு பிள்ளையார் சிலையோடு வருவதுதான் அவரது ஹாபி. இப்படி சேகரித்து சேகரித்தே அவரது வீட்டில் நு£ற்றுக்கணக்கான பிள்ளையார்கள் இருக்கிறார்களாம்.
இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு சினேகா வீட்டில் இருக்கிற பிள்ளையார்களுக்கெல்லாம் ஸ்பெஷல் பூஜை நடந்திருக்குமே? அதுதான் இல்லையாம். ஒவ்வொரு வருஷமும் பிள்ளையார்ஜியை விழுந்து விழுந்து கவனிக்கும் சினேக், இந்த வருடம் டூ விட்டுவிட்டாராம் தனது நண்பருக்கு. அதனால் தடபுடல் விருந்துகளை குறைத்துக் கொண்டு சைலண்டாக ஒரு வணக்கம் போட்டதோடு சரி. பிள்ளையார் சதுர்த்தி முடிந்தது.

அழகான பொண்ணுக்கும், ஆபத்பாந்தவனுக்கும் என்ன பிரச்சனை? வேறொன்றுமில்லை. அவ்வப்போது இமேஜை குலைப்பது மாதிரி பிரச்சனைகள் வந்து தொலைக்கிறதே, அதை தடுக்கவில்லையே இந்த நண்பன். அதனால்தான் இந்த வருடம் சுமார் பூஜையோடு நிறுத்திக் கொண்டாராம்.

எல்லா பிள்ளையாரும் வச்சிருக்காரு. எஸ்எம்எஸ் பிள்ளையாரும் இருப்பாரோ?

'மாமியாரா வரட்டுமா?'-சிம்ரன்




தனுஷுக்கு மாமியாராக நடிக்க நான் மறுத்துவிட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. இப்போது கூப்பிட்டாலும் மாமியார் வேஷம் கட்ட நான் ரெடி என்கிறார் நடிகை சிம்ரன்.
ரஜியின் வெற்றிப் படமான 'மாப்பிள்ளை'யை ரீமேக் செய்கிறார் அவரது நிஜ மாப்பிள்ளை தனுஷ். இந்தப் படத்தில் தனுஷ் மாமியாராக நடிக்க பல நடிகைகளிடம் பேசிப் பார்த்து, கடைசியில் ஸ்ரீதேவியை ஓகே செய்துள்ளனர்.

அதற்கு முன் சிம்ரனிடம் இந்த வேடத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டதாகவும், அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த விஷயம் தனக்கு இப்போதுதான் தெரியும் என்றும், தனுஷுக்கு மாமியாராக நடிக்க தனக்கு சம்மதமே என்றும் கூறியுள்ளார்.

"என்னைச் சுற்றி இப்படித்தான் சம்பந்தமே இல்லாதவர்கள் குழப்பம் விளைவித்துவிடுகிறார்கள். என்னிடம் இது தொடர்பாக யாரும் பேசவே இல்லை. ஆனால் நான் நடிக்க மறுத்துவிட்டதாக அதற்குள் செய்தி கசியவிட்டுவிட்டார்கள். என்ன செய்வது?" என்கிறார் வருத்தத்துடன் சிம்ரன்.

என்ன செய்வது... 'முற்பகல் செய்யின்...' பழமொழியை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான் அம்மணி!
.

விளம்பரத்தில் சூர்யா - ஜோதிகா ஜோடி




மாதவன் - வித்யாபாலன் ஜோடியை வைத்து ஏர்டெல் நிறுவனம் தனது விளம்பரத்தை செய்து கொண்டிருக்க, ஏர்செல் நிறுவனமோ நிஜ ஜோடிகளான சூர்யா ஜோதிகாவை வைத்து விளம்பரத்தை வெளியிட்டு வருகிறது.
சூர்யா ஏர்செல் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பதால் இந்த விளம்பரத்துக்கான ஐடியா கிடைத்ததும், ஜோதிகாவே இந்த விளம்பரத்தில் சூர்யாவுடன் நடித்தால் ஒரிஜினாலிட்டியாக இருக்கும் என்று நினைத்த ஏர்செல் நிறுவனம் சூர்யாவை கேட்டுள்ளது.
அவரோ ஜோதிகாவிடமே கேட்டுக்கொள்ளும்படி கூறியுள்ளார். ஜோதிகாவும் ஓ.கே. சொல்லிவிட இப்போது இந்த விளம்பரம் பட்டி தொட்டி எங்கும் கலக்கிக் கொண்டு வருகிறது.
‘ஏர்டெல் ரீல் ஜோடியைப் போட்டா, ஏர்செல் ரியல் ஜோடியைப் போட்டு கலக்குறாங்க’ என்று பார்க்கிறவர்கள் எல்லாரும் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமீதா மீது நடவடிக்கை? கோடம்பாக்கத்தில் பரபரப்பு





தான் நடிக்காத பட விழாக்களில் கூட கலந்து கொள்பவர்தான் நமீதா. ஆனால் என்ன பிரச்சனையோ? இவரே ஹீரோயினாக நடிக்கும் ‘அழகான பொண்ணுதான்’ பட விழாவுக்கு வரவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த ஆதி நாராயணா பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அப்படத்தின் நாயகி மீராஜாஸ்மின் வரவில்லை. அந்த மேடையிலேயே இதை கண்டித்தார் டைரக்டர் பேரரசு. அதன் தொடர்ச்சியாக இந்த படத்தின் நாயகியான நமீதாவும் வராமல் போனதால் தயாரிப்பாளர் சங்கம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

விழா மேடையிலேயே இதற்கெல்லாம் முடிவு கட்டுவது போல பேசினார் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன். “இப்போதெல்லாம் எந்த நடிகர் நடித்த படம் என்று யாரும் கேட்பதில்லை. கதைதான் முக்கியம் என்கிறார்கள். ஒரு படத்துக்கு இசை அமைப்பாளரை ஒப்பந்தம் செய்தால் அவர் எப்போது பாட்டு தருவார் என்று கூட தெரியவில்லை. ஆனால் சுந்தர் சி.பாபு தயாரிப்பாளர்களின் இசை அமைப்பாளராக இருக்கிறார். இங்கு தயாரிப்பாளர் சங்க அனுமதியுடன் ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறேன். இனிமேல் படம் சம்பந்தப்பட்ட எந்த விழாவாக இருந்தாலும் அப்படத்தில் நடிக்கும் நடிகைகள் கலந்து கொள்ள வேண்டும். அப்படி கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் காரசாரமாக!

இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று ஃபெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தெரிவிக்க, டிமிக்கி கொடுக்கும் நடிகைகள் ஆட்டம் கண்டிருக்கிறார்களாம்.

சேரன் - நேற்று இல்லாத மாற்றம்




பொக்கிஷம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததில் சேரனுக்கு வருத்தம். அவரைவிட அதிக வருத்தம் சேரனின் ரசிகர்களுக்கு. அவர்களின் பாராட்டும், பாஸிட்டிவ்வான விமர்சனமுமே தற்போது சேரனுக்கு எனர்‌ஜி பூஸ்ட்.
பொக்கிஷம் ஓடும் திரையரங்களுக்கு நே‌ரில் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்திவரும் சேரன், இனி சோதனை முயற்சிகள் செய்வதில்லை, குறிப்பாக அடுத்தவர் தயா‌ரிப்பில் என்று புதிய முடிவெடுத்திருப்பதை சில நாட்கள் முன்பு குறிப்பிட்டிருந்தோம். இந்த புதிய முடிவுடன் வேறொரு மாற்றத்தையும் சேரனிடம் காண முடிகிறது. அது தோற்றத்தில் உள்ள மாற்றம்.

பொக்கிஷம் படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் படத்தில் நடிப்பதாக இருந்தார் சேரன். சேரனை வைத்து படமெடுப்பதாக மிஷ்கினும் அறிவித்திருந்தார். இந்தப் படத்துக்காக சேரனும் அடர்த்தியாக தாடி வளர்த்திருந்தார்.

மிஷ்கின் கமலை சந்தித்த பிறகு எல்லாமே மாறிப் போனது. கமல் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க பச்சைக் கொடி காண்பித்ததால், யுத்தம் செய் படத்திலிருந்து சேரனை கழற்றிவிட்டு கமலுக்கு கதை பண்ண ஆரம்பித்தார் மிஷ்கின். இந்த திடீர் பல்டி காரணமாக யுத்தம் செய் படத்துக்கு வளர்த்த அடர்த்தியான தாடியை ஷேவ் செய்து பளபளப்பாக மாறியிருக்கிறார் சேரன்.

அடுத்து பெ‌ரிய ஹீரோவை வைத்து பாரசீக ரோஜாவை அவர் இயக்குவார் என கூறப்படுகிறது. ஆல் தி பெஸ்ட் சேரன்.

தலைவலியில் கார்த்தி படங்கள்




பருத்தி வீரனில் அறிமுகம் ஆனார் கார்த்தி. முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு நடிப்பில் பிச்சு உதறியிருந்தார்.
அடுத்தடுத்து படங்கள் வந்து கோலிவுட்டில் டாப் இடத்தைப் பிடிப்பார் என்று ஆளாளுக்கு கணித்துக் கொண்டிருக்க கார்த்தி செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவனில்’ புக் ஆனார்.
இந்தப் படத்திலும் கலக்கிவிடலாம் என்று நினைத்த கார்த்திக்கு வினை வேறு உருவத்தில் வந்தது. செல்வராகவன் இரண்டு வருடங்களை அலேக்காக தூக்கிச் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டார். இந்த நேரத்தில்தான் ‘ஆயிரத்தில் ஒருவன்’ உருவாகி இருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது போஸ்ட் புரடக்க்ஷன்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், ஆயிரத்தில் ஒருவனில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கார்த்தி கால்ஷீட் கொடுத்து நடித்த லிங்குசாமியின் ‘பையா’ படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இப்போதுதான் தலைவலி ஆரம்பமானது. இரண்டாவதாக ஆயிரத்தில் ஒருவன் வந்தால் நன்றாக இருக்கும் என கார்த்திக் எண்ண, லிங்குசாமியோ படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.
விரைவில் பையாவும், அதைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவனும் ரசிகர்களுக்கு விருந்தாகும

பாலிவுட்டில் குதிக்கும் ‘கந்தசாமி’





சாதாரண படங்களே இந்தி பேச ஆசைப்படம் போது கலைப்புலி தாணு தயாரிப்பில் பிரமாண்டமாகச் செலவு செய்து எடுக்கப்பட்ட ‘கந்தசாமி’ இந்தி பேசமாட்டாரா என்ன?
சீயான் விக்ரம் - ஸ்ரேயா நடிப்பில் வெளியான படம் ‘கந்தசாமி’. இந்தப் படம் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியாகி கலக்க்ஷனில் முதல் வாரத்தில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தை அப்படியே இந்தியில் டப் செய்து வெளியிட்டால் என்ன என்ற யோசனை தாணு மனதில் தோன்ற, உடனே அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். ஏற்கனவே விக்ரம் நடிப்பில் வெளியான ‘அந்நியன்’ இந்தியில் ‘அபரசித்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஓரளவு கல்லா கட்டியது. இது தாணுக்கு மேலும் தெம்பைக் கொடுத்துள்ளது.
அதிலும் மணிரத்னத்தின் இந்தி ‘ராவண்’ படத்தில் விக்ரம் நடித்து வருவதும் விக்ரமுக்கு பாலிவுட்டில் ஒரு மாஸ் உருவாக்கி உள்ளது. விரைவில் ‘கந்தசாமி’ இந்திசாமி ஆவார்.