
| பருத்தி வீரனில் அறிமுகம் ஆனார் கார்த்தி. முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு நடிப்பில் பிச்சு உதறியிருந்தார். |
அடுத்தடுத்து படங்கள் வந்து கோலிவுட்டில் டாப் இடத்தைப் பிடிப்பார் என்று ஆளாளுக்கு கணித்துக் கொண்டிருக்க கார்த்தி செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவனில்’ புக் ஆனார். இந்தப் படத்திலும் கலக்கிவிடலாம் என்று நினைத்த கார்த்திக்கு வினை வேறு உருவத்தில் வந்தது. செல்வராகவன் இரண்டு வருடங்களை அலேக்காக தூக்கிச் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டார். இந்த நேரத்தில்தான் ‘ஆயிரத்தில் ஒருவன்’ உருவாகி இருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது போஸ்ட் புரடக்க்ஷன்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஆயிரத்தில் ஒருவனில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கார்த்தி கால்ஷீட் கொடுத்து நடித்த லிங்குசாமியின் ‘பையா’ படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இப்போதுதான் தலைவலி ஆரம்பமானது. இரண்டாவதாக ஆயிரத்தில் ஒருவன் வந்தால் நன்றாக இருக்கும் என கார்த்திக் எண்ண, லிங்குசாமியோ படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். விரைவில் பையாவும், அதைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவனும் ரசிகர்களுக்கு விருந்தாகும |
No comments:
Post a Comment