
| மாதவன் - வித்யாபாலன் ஜோடியை வைத்து ஏர்டெல் நிறுவனம் தனது விளம்பரத்தை செய்து கொண்டிருக்க, ஏர்செல் நிறுவனமோ நிஜ ஜோடிகளான சூர்யா ஜோதிகாவை வைத்து விளம்பரத்தை வெளியிட்டு வருகிறது. |
சூர்யா ஏர்செல் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பதால் இந்த விளம்பரத்துக்கான ஐடியா கிடைத்ததும், ஜோதிகாவே இந்த விளம்பரத்தில் சூர்யாவுடன் நடித்தால் ஒரிஜினாலிட்டியாக இருக்கும் என்று நினைத்த ஏர்செல் நிறுவனம் சூர்யாவை கேட்டுள்ளது. அவரோ ஜோதிகாவிடமே கேட்டுக்கொள்ளும்படி கூறியுள்ளார். ஜோதிகாவும் ஓ.கே. சொல்லிவிட இப்போது இந்த விளம்பரம் பட்டி தொட்டி எங்கும் கலக்கிக் கொண்டு வருகிறது. ‘ஏர்டெல் ரீல் ஜோடியைப் போட்டா, ஏர்செல் ரியல் ஜோடியைப் போட்டு கலக்குறாங்க’ என்று பார்க்கிறவர்கள் எல்லாரும் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். |
No comments:
Post a Comment