Sunday, August 30, 2009

நமீதா மீது நடவடிக்கை? கோடம்பாக்கத்தில் பரபரப்பு





தான் நடிக்காத பட விழாக்களில் கூட கலந்து கொள்பவர்தான் நமீதா. ஆனால் என்ன பிரச்சனையோ? இவரே ஹீரோயினாக நடிக்கும் ‘அழகான பொண்ணுதான்’ பட விழாவுக்கு வரவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த ஆதி நாராயணா பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அப்படத்தின் நாயகி மீராஜாஸ்மின் வரவில்லை. அந்த மேடையிலேயே இதை கண்டித்தார் டைரக்டர் பேரரசு. அதன் தொடர்ச்சியாக இந்த படத்தின் நாயகியான நமீதாவும் வராமல் போனதால் தயாரிப்பாளர் சங்கம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

விழா மேடையிலேயே இதற்கெல்லாம் முடிவு கட்டுவது போல பேசினார் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன். “இப்போதெல்லாம் எந்த நடிகர் நடித்த படம் என்று யாரும் கேட்பதில்லை. கதைதான் முக்கியம் என்கிறார்கள். ஒரு படத்துக்கு இசை அமைப்பாளரை ஒப்பந்தம் செய்தால் அவர் எப்போது பாட்டு தருவார் என்று கூட தெரியவில்லை. ஆனால் சுந்தர் சி.பாபு தயாரிப்பாளர்களின் இசை அமைப்பாளராக இருக்கிறார். இங்கு தயாரிப்பாளர் சங்க அனுமதியுடன் ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறேன். இனிமேல் படம் சம்பந்தப்பட்ட எந்த விழாவாக இருந்தாலும் அப்படத்தில் நடிக்கும் நடிகைகள் கலந்து கொள்ள வேண்டும். அப்படி கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் காரசாரமாக!

இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று ஃபெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தெரிவிக்க, டிமிக்கி கொடுக்கும் நடிகைகள் ஆட்டம் கண்டிருக்கிறார்களாம்.

No comments:

Post a Comment