Tuesday, September 1, 2009

நடிகர் சிம்பு வீட்டில் ரசிகர்கள் மோதல்


அரசியல் கட்சிகள் ரேஞ்சுக்கு சிம்புவின் ரசிகர் மன்றம் மாறிவிட்டிருக்கிறது.
சிம்பு ரசிகர் மன்றத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தவரை சிம்பு தூக்கிவிட அவர் தன் சகாக்கள் சிலரைக் கூட்டி வந்து நடிகர் சிம்புவின் வீட்டின் முன்பு நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சிம்பு வந்து சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே நின்ற ரசிகர்களுக்கும் வீட்டின் உள்ளே நின்று கொண்டிருந்த ரசிகர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்பு காவல்துறையினர் வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டியுள்ளார்கள். இதனால் சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ரகளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்ய முயற்சித்தனர். ஆனால், ‘இது எங்கள் ரசிகர் மன்ற பிரச்சனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நடவடிக்கை வேண்டாம்’ என்று சிம்பு கேட்டுக் கொண்டதால் கைது செய்யாமல் விட்டுவிட்டனர்.

ம்... நல்லா படம் காட்டுறாங்கப்பா..

No comments:

Post a Comment