Tuesday, September 1, 2009

முன்பு கணவன் இப்போது நண்பன் - சோனியா அகர்வால்




செல்வராகவனுக்கும் சோனியாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த கருத்து வேறுபாட்டுக்கு நடிகை ஆன்ட்ரியாவுடன் செல்வராகவனுக்கு இருந்த தொடர்பு என்று தனிப்பட்ட முறையில் சோனியா மனதில் சில புழுக்கங்களும் இருந்து வந்துள்ளன. இது பின்பு கருத்து வேறுபாடு தோன்றவும் காரணமாக அமைந்திருக்கிறது.

“கணவராகப் பார்த்த செல்வராகவனை இப்போது எனது நண்பராகப் பார்க்கிறேன். எப்போதாவது போனில் பேசிக் கொள்கிறோம். ஆன்ட்ரியாவால் நாங்கள் பிரிகிறோம் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன். செல்வராகவன் படங்களில் நடிப்பேனா என்று இப்போது சொல்ல முடியாது...” என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் சோனியா அகர்வால். இதையடுத்து சோனியா விரைவில் படங்களில் தலைகாட்டுவார் என்று தெரிகிறது.

ம்... அக்கா அண்ணி வேடம்தான் கிடைக்கும்...

No comments:

Post a Comment